இரண்டாம் பாகம் பதிவு #13, © துரை வரதராஜன், 2022
Category Archives: கவிதைகள்
உணர்வுகளின் உணர்வுகள்!
ஒன்றாம் பாகம் பதிவு #12, © துரை வரதராஜன், 2022
கிராமத்துப் பெண்
பதிவு #8, © துரை வரதராஜன், 2022 கிழக்குச் செவ்வானம்வெளுக்கும் முன்னேசேவல் கூவும்!சேவற் கொடியோன்செவி மலர. அல்லி தாமரைமலரும் முன்னேதாய்மார் கோலமிடும்!எருது வாகனனருள்வான்ஏர் இயங்கவே. தர்மம் தலைப்பணிதன்பசி ஆறாவிடினும்தன்மனையில் தவமிருப்பர்!தவறாது பசியாறுவர்தன்னை நாடியோர். தன்பிள்ளை தன்கொள்ளைதாழாது தழைத்திடவேதன்கணவர் களைக்கவிடார்!காப்பதே கருமமாயினர்கருத்தொற்றுமை உடையார். உற்றார் உறவினர்உறவாடி கலந்துரையாடிவிரும்பியவர் விளையாடுவர்!விடைபெறுவர் விருப்பமுடனேவின்னவர் வாழ்த்திடவே
அம்மா
பதிவு #6, © துரை வரதராஜன், 2022 அம்மா என்றால் அன்பு! அன்பு என்றால் அழகு! அழகு என்றால் அறிவு! அறிவு என்றால் ஆசான்! ஆசான் என்றால் ஞானம்! ஞானம் என்றால் உயிர்! உயிர் என்றால் பிதா! பிதா என்றால் பரம்பொருள்
தை
பதிவு #3, © துரை வரதராஜன், 2022 பொங்கலோ பொங்கல்! இனிதுபுதிதுபொலிவுபெற்ற தை! புத்துணர்வுகொடுத்த தை! புதுப் பானைபொங்கிய தை! புன்னகைபூத்த தை! இல்லறம்புதுப்பொலிவுபெற்ற தை! யாம்நன்றிசொல்வ தை! ஏற்றுக்கொள்ளஉம்மன தை! எம் மனம்விரும்புவ தை! பதிப்பித்தேன்ஏற்றுக் கொள்ளவும்முடிந்த தை! வாழ்க வளமுடன்! புரவலர்கள் தம்பி தங்கைகள்அன்பு இல்லத்தினர்கள்பிரியமான இளந்தளிர்கள்ஏனைய குடும்பத்தார்உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருமஇன்புற்றிருக்கதைத்திருநாள்பொங்கல் வாழ்த்துக்கள்! மனம் நிறைந்த நன்றிகள்!
மார்கழி
பதிவு #2, © துரை வரதராஜன், 2022 நற்காலையில் சங்கொலி செவிமடுத்து கீழ்வானம் பளிச்சிடுமுன்னே நண்பர்கள் புடைசூழ நல்லதண்ணீர் தடாகத்தில் தாமரை அல்லி பூத்திருக்க தேனீக்கள் மகரந்தம் நுகரும் முன்னே ஓடி குதித்தோம் நனைந்த அரைக்கால் சட்டை பிழிந்த துண்டு இடைக்கட்டி சந்தனம் குங்குமம் பொட்டிட்டு ஜால்ரா சப்தம் சலனத்தை அகற்ற சங்கீத வித்வான்கள் ஆனோம்! சிறார்களின் சிற்றொலி சித்தி விநாயகர் செவிமடுக்க ஆரம்பமாகும் ஓம் நமப் பார்வதி பதியே என்று கைத்தள நிறைகனி தோடுடைய செவியன்Continue reading “மார்கழி”
விநாயகா! விநாயகா!
பதிவு #1, © துரை வரதராஜன், 2022 விநாயகா! விநாயகா! வாழ்விப்பாய்! வாழ்விப்பாய்!வாழ்த்திடுவோரைவாழ்விப்பாய்! வளம் தருவாய்! வளம் தருவாய்!வலம் வருவோர்க்குவளம் தருவாய்! வழங்கிடுவாய்! வழங்கிடுவாய்!வணங்குவோருக்குவழங்கிடுவாய்! வளர்த்திடுவாய்! வளர்த்திடுவாய்!வழி வழியாய் வரும் வம்சத்தைவளர்த்திடுவாய்! தீர்த்திடுவாய்! தீர்த்திடுவாய்!தீர்க்கமுற வினைகள்தீரதீர்த்திடுவாய்! விநாயகா! விநாயகா!